தாம்பரத்தில் பாஸ்போர்ட் சேவை மையத்தில் திடீரென இணையதள கோளாறு ஏற்பட்டதால் மூன்று மணி நேரம் காத்திருந்த பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். காலை 9 மணி முதல் 200க்கும் மேற்பட்டோர் காத்திருந்த நிலையில், அதிகாரிகள் தரப்பு எந்த வித முறையான பதில் அளிக்கவில்லை எனக்கூறி அவர்கள் குற்றஞ்சாட்டினார். இந்நிலையில் பல மணி நேரம் பிறகு மீண்டும் இணையதள சேவை தொடங்கிய நிலையில் பாஸ்போர்ட் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்றன.
Back to Top News
Top
August 12, 2026 at 5:47 AM
தாம்பரத்தில் பாஸ்போர்ட் சேவை மையத்தில் திடீரென இணையதள கோளாறு..!
Polimer News