தொகுதி மறுவரையறைக்கு எதிராக அரசினர் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். மக்களவை உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கையான 543 தொடர வேண்டும் என்றும், அதே எண்ணிக்கையில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தென் மாநிலங்கள் மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்தியுள்ள நிலையில், தொகுதி மறுவரையறையால் அவற்றுக்கு அநீதி இழைக்கப்படும் எனக் குறிப்பிட்டார். வரவிருக்கும் பொதுத் தேர்தல்களில் 3-ல் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், மகளிர் இடஒதுக்கீட்டை இனியும் தாமதப்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தினார். “மகளிர் அதிகாரம் பெறும்போதுதான் நாடு முன்னேறும்” எனக் கூறிய முதலமைச்சர் விஜய், தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். “இது ஒரு அரசியல் கட்சியின் தீர்மானம் மட்டும் அல்ல” என்றும் அவர் தெரிவித்தார். அதிமுக, பாமக, பாஜக, தேமுதிகவின் எதிர்ப்புக்கு மத்தியில் தீர்மானம் நிறைவேற்றம். திமுக, காங்கிரஸ், இ.கம்யூ., மா.கம்யூ., விசிக, ஐ.யூ.எம்.எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதல்வரின் தீர்மானம் நிறைவேற்றம்.
Back to Top News
Top
August 12, 2026 at 6:30 AM
தொகுதி மறுவரையறைக்கு எதிரான முதலமைச்சரின் தனித்தீர்மானம் நிறைவேற்றம்..!
Polimer News