உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட மைக்கைலோ பெடரோவ் ((Mykhailo Fedorov)), போர்ச்சூழல் நிலவினாலும் கூட அதிபர் தேர்தல் நடத்தி நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். 2022 ஆம் ஆண்டு ரஷ்யா போரை தொடங்கிய பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸிக்கு இதுபோன்ற சவால் விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. சமூக ஊடகம் வாயிலாக பேசிய மைக்கைலோ பெடரோவ், ரஷ்யாவின் பிடியில் உக்ரைன் ஜனநாயகத்தை பிணையக்கைதியாக வைத்திருக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். ஒரு சுதந்திரமான ஐரோப்பிய நாடாக உக்ரைன் தொடர வேண்டும் என்பதற்காகவே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.