ஆந்திர மாநிலம் போகபுரத்தில் சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூ பெயரிலான சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 5 ஆயிரத்து 640 கோடி ரூபாய் செலவில் இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் நடைமுறை, தானியங்கி முறையில் உடைமைகளை கையாளும் வசதி, ஏஐ தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றுடன் ஆண்டுக்கு 60 லட்சம் பயணிகளை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். முன்னதாக 14 ஆயிரம் பழங்குடியின பெண்கள் இணைந்து திம்சா என்ற பாரம்பரிய நடனமாடி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நடனம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது. இதைத் தொடர்ந்து 17 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
Back to Top News
Top
August 1, 2026 at 7:49 AM
அல்லூரி சீதாராம ராஜூ பெயரிலான சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்..!
Polimer News