சென்னை வடபழனி முருகன் கோயிலில் நிர்வாகக் குறைபாடுகள் தொடர்பாக எழுந்த பல்வேறு புகார்களைத் தொடர்ந்து, அங்கு நேரில் சென்ற அமைச்சர் ரமேஷ் விரிவான ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, பக்தர்களை உள் பிரகாரம் வரை செல்ல அனுமதிக்காமல் 20 அடிக்கு முன்பாகவே தடுப்புகள் அமைத்துத் தடுப்பதாக பொதுமக்கள் அமைச்சரிடம் நேரில் குற்றஞ்சாட்டினர். பக்தர்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட்டும் என உறுதியளித்தார்.