தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அவைக்காவலர்கள் மூலம் திமுக எம்எல்ஏக்கள் அதிரடியாக வெளியேற்றம். முதலமைச்சர் விஜய் நேற்று பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டதால் நடவடிக்கை. முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் நேற்று பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க கோரி சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட திமுக எம்எல்ஏக்கள். பலமுறை எச்சரிக்கை விடுத்தும் கேட்காததால் அவைக்காவலர்களை அழைத்து வெளியேற்ற உத்தரவிட்டார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர். திமுக கொறடா எ.வ.வேலு அல்லது எதிர்கட்சி துணைத் தலைவர் கே.என்.நேரு ஆகிய இருவரில் ஒருவருக்கு பேச அனுமதி என சபாநாயகர் கூறியும் தொடர்ந்து கூச்சல் குழப்பம். சபாநாயகரின் தீர்ப்புக்கு எதிராக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி காவலர்கள் மூலம் வெளியேற்றம். சட்டப்பேரவையில் நேற்று பேசுவதற்கு முன்னதாகவே முதலமைச்சர் விஜய் தன்னிடம் போதுமான ஆதாரங்களை காட்டிவிட்டார். அவைக் குறிப்பில் இருந்து பேச்சை நீக்காதது ஏன் என்பதற்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் விளக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏற்கனவே பலமுறை சர்க்காரியா கமிசன் குறித்து விவாதம் நடைபெற்றுள்ளது. முதலமைச்சர் விஜய் பேசியதில் எவ்வித தவறும் இல்லை என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தீர்ப்பு. முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் பேசியதிலும் எவ்வித விதிமீறலும் இல்லை. வரலாற்றில் நடந்த ஒன்றை தான் குறிப்பிட்டதாகவும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் விளக்கம். சட்டப்பேரவையை இன்று நடத்தவே விடக்கூடாது எனும் உள்நோக்கத்தோடு திமுகவினர் வந்தனர். அவையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதற்காகவே திமுகவினர் வெளியேற்றப்பட்டனர் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் விளக்கம். சட்டப்பேரவையில் பேச திமுகவினருக்கு தொடர்ந்து அனுமதி கொடுப்பது தான், நான் செய்த தவறா? தனது இருக்கையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்ட நிலையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஆதங்கம்.
Back to Top News
Top
September 8, 2026 at 5:51 AM
சட்டப்பேரவையில் இருந்து அவைக்காவலர்கள் மூலம் திமுக எம்எல்ஏக்கள் அதிரடியாக வெளியேற்றம்..!
Polimer News