சர்க்காரியா கமிஷனின் அறிக்கை மற்றும் திமுக அரசு மீதான அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளை சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் படித்ததை அவைக் குறிப்பில் இருந்து நீக்குமாறு எதிர்க்கட்சிக் கொறடா எ.வ.வேலு கோரிக்கை விடுத்த நிலையில், அவற்றை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என சபாநாயகர் தீர்ப்பளித்ததால் அமளி ஏற்பட்டது. தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட திமுகவினரை அகற்ற சபாநாயகர் உத்தரவிட்டதை அடுத்து, அவைக் காவலர்கள் உள்ளே வந்து அனைவரையும் தூக்கிச் சென்றனர்.