தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து உரிய நீரை திறக்க கர்நாடகாவுக்கு என்ன பிரச்சனை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காவிரி நீரை திறக்கக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், விகிதாச்சாரப்படி கிடைக்க வேண்டிய நீர் கிடைக்கவில்லை என தமிழ்நாடு அரசு வாதிட்டது. கூடுதல் கோரிக்கைகள் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிடலாம் என்று உச்சநீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். திறக்கப்பட்ட நீர், பெறப்பட்ட நீரின் அளவு பற்றி அறிக்கையாக தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Back to Top News
Top
August 24, 2026 at 9:28 AM
தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறக்க கர்நாடகாவுக்கு என்ன பிரச்சனை? - உச்சநீதிமன்றம் கேள்வி
Polimer News