சென்னை அண்ணாநகரில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து, 59 மதிக்கத்தக்க பெண் உயிரிழந்தார். பாடிபுதுநகரைச் சேர்ந்த கலாவதி, நேற்று இரவு பணிமுடிந்து பேருந்து ஏறச் சென்றபோது மழைநீர் தேங்கியிருந்த பள்ளத்தில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. சுமார் 15 நிமிடங்கள் உயிருக்கு போராடிய அவரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மின்சாரம் தாக்கியே தனது தாய் உயிரிழந்ததாகவும், அவர் விழுந்த பள்ளத்தின் கீழ் செல்லும் மின் வயர்கள் அவசர அவசரமாக சீரமைக்கப்பட்டதாகவும் கலாவதியின் மகள் சங்கீதா குற்றம்சாட்டியுள்ளார்.