அரசியல் துறவறம் மேற்கொள்வதாக அறிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்ட இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், ராமதாஸை சந்திக்க வரும் பொதுமக்கள் மற்றும் பாமக நிர்வாகிகள் அரசியல் தொடர்பான விஷயங்களை பேச வேண்டாம் என தைலாபுரம் தோட்ட இல்லத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும், காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ராமதாஸை பொதுமக்கள் மற்றும் பாமக நிர்வாகிகள் சந்திக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் துறவறம் மேற்கொண்டுள்ளதால், அவரை சந்திக்க வருவோர் அரசியல் குறித்து பேசுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Back to Top News
Top
September 4, 2026 at 5:46 AM
ராமதாஸை சந்திக்க வருவோர் அரசியல் பேச வேண்டாம்: தைலாபுரம் தோட்டத்தில் அறிவிப்பு பலகை
Polimer News