அமெரிக்க ரிசர்வ் வங்கியின் பணவியல் குழுவில் ரகுராம் ராஜன் உள்ளிட்ட 3 இந்திய பொருளாதார வல்லுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை அணுகுமுறையை ஆய்வு செய்யவும், அதில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான பரிந்துரைகளை வழங்கவும் அமைக்கப்பட்ட ஐந்து குழுக்களை ஃபெடரல் ரிசர்வ் தலைவர் கெவின் வார்ஷ் அறிவித்தார். கல்வியாளர்கள், முன்னாள் மத்திய வங்கி அதிகாரிகள் மற்றும் பெருநிறுவனத் தலைவர்கள் அடங்கிய இந்தப் பட்டியலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று பேர் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், டெல்லியை பூர்வீகமாக கொண்ட பொருளாதார நிபுணர் ராஜ் செட்டி மற்றும் மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷா சர்மா ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளனர். பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான புதிய யோசனைகளை இந்தக் குழு வழங்க உள்ளது.
Back to Top News
Top
July 16, 2026 at 10:53 AM
அமெரிக்க பணவியல் கொள்கை குழுவில் 3 இந்தியர்கள் நியமனம்..!
Polimer News