வார விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்ததால், நீண்ட வரிசை ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினம் என்பதால், திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் திருமண நிகழ்ச்சிகளும் அதிகளவில் நடைபெற்றன. ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனால் கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த உறவினர்கள், சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் என கோயில் வளாகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். வார விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த நாள் ஒரே நேரத்தில் அமைந்ததால் திருச்செந்தூர் பகுதியில் வழக்கத்தை விட பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்தது. இதன் காரணமாக கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கூட்ட நெரிசல் காணப்பட்டது.
Back to Top News
Top
August 23, 2026 at 8:41 AM
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்
Polimer News