பேரூராட்சி சார்பில் அடிக்கப்பட்ட கொசு மருந்து காரணமாக மூச்சுத் திறணல் ஏற்பட்டு கோவை மாவட்டம் அன்னூரில் பெண் உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். டெங்குக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கழிவுநீர்க் கால்வாய் மற்றும் குடியிருப்புகளுக்குள் கொசு மருந்து அடிக்கப்பட்டது. இதில், 60 வயதைக் கடந்த மோகன் என்ற ஆட்டோ ஓட்டுநரும், ராணி என்ற பெண் ஒருவரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. கொசு மருந்து அடிக்கும் பணியை பேரூராட்சி நிர்வாகத்தினர் சரியாகக் கையாளாததே இதற்கு காரணம் என்று மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.