தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 60 மாணவ-மாணவிகள் சேர் மீது ஏறி நின்றபடி, ஒரே நேரத்தில் பாதஹஸ்தாசனம் செய்து அசத்தினர். மாணவர்களின் இந்த சாதனை முயற்சி சோழன் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டதுடன், மாணவர்களுக்கு சாதனைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.