இடைத்தேர்தலில் இடதுசாரிகள் போட்டியிடுவதாக முன்பே அறிவித்திருந்தால் நாம் தமிழர் கட்சி போட்டியிடாமல் அவர்களை ஆதரித்திருக்கும் என்று சீமான் தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியாரின் 109 வது பிறந்த நாளை ஒட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் பேட்டி அளித்த சீமான்,பதவிக்காக ராஜினாமா செய்துவிட்டு, வேறு கட்சியில் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி பொதுவாக முன்வைத்த ஒரு கருத்தை தவெகவினர் தங்களோடு பொருத்திக் கொண்டு பேசுவது ஏற்புடையதல்ல என்றும் சீமான் கூறினார்.