சென்னை கொளத்தூரில் உள்ள தபால் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தினை மத்திய அமைச்சர் எல்.முருகன் துவக்கி வைத்தார். அந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு, வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி, மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய எல்.முருகன், வடசென்னை மக்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு மவுண்ட் ரோடு சென்று தான் விண்ணப்பிக்கும் சூழ்நிலை இருந்த நிலையில் தற்போது இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக கூறினார். அரசை மக்கள் எளிதில் அணுகக்கூடிய அளவில் தற்போது ஒவ்வொரு திட்டமாக செயல்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.