திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு பகுதியில் வந்து கொண்டிருந்த வி.நளினி வித்யாலயா தனியார் பள்ளி பேருந்தை மதுபானக்கடை அருகே மதுபோதையில் வழிமறித்த இரண்டு பேர் ஓட்டுநரை தாக்க முயற்சித்ததோடு பேருந்தையும் அடித்து சேதப்படுத்தினர். இதனால் அச்சமடைந்து பேருந்தில் இருந்து மாணவர்கள் அலறிய நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் பேருந்தை தாக்கிய தீபக்ராஜ் மற்றும் வெங்கடேசன் இருவருக்கும் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், இதற்கு காரணமான அப்பகுதியில் உள்ள அரசு மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.