டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன், 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதியுடன் நிறைவடையும் தனது பதவிக்காலத்திற்குப் பிறகு, மீண்டும் அந்தப் பொறுப்பை ஏற்கப் போவதில்லை என அறிவித்துள்ளார். இது தொடர்பாக சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம் கடந்த 40 ஆண்டுகளாக டாடா குழுமத்தில் பணியாற்றி வருவதாகவும் கடந்த 10 ஆண்டுகளாக டாடா சன்ஸ் நிறுவனத்தை வழிநடத்தியது தமக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என்றும் கூறியுள்ளார். தனது பதவிக்காலத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்க அறக்கட்டளைகளும் வாரியமும் பரிந்துரைத்த போதிலும், இயக்குநர் குழுவின் ஒரு உறுப்பினர் ஆதரவு தெரிவிக்காததால் ஒருமனதான முடிவு எட்டப்படவில்லை என்று சந்திரசேகரன் கூறியுள்ளார். 6 மாதங்களாக இதில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததாலும், நிறுவனத்தின் எதிர்கால நலன் கருதியும் இந்த முடிவை எடுப்பதாகவும், என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
Back to Top News
Top
August 12, 2026 at 10:00 AM
டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரனின் முக்கிய முடிவு - காரணம் என்ன?
Polimer News