திரைப்படத்துக்கு வாங்கிய முன்பணம் 40 லட்சம் ரூபாயை திருப்பி தராதது தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் கோரி நடிகர் ராஜ்கிரண் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை மீஞ்சூரில் பட தயாரிப்பு நிறுவனம் நடத்தும் சரவணன் என்பவர், 2022ல் படத்துக்காக ராஜ்கிரணுக்கு 50 லட்சம் ரூபாய் முன்பணம் அளித்துள்ளார். தயாரிப்புப் பணிகள் துவங்காத நிலையில், 10 லட்சம் ரூபாயை திருப்பி தந்த ராஜ்கிரண், 40 லட்சம் ரூபாயை தராமல் ஏமாற்றியதாக சரவணன் அளித்த புகாரில் கடந்த ஆகஸ்டில் ராஜ்கிரண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனால், முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்த ராஜ்கிரண், ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான தான், எங்கும் தப்பி விட மாட்டேன் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Back to Top News
Top
September 8, 2026 at 5:15 AM
முன் ஜாமீன் கோரி நடிகர் ராஜ்கிரண் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு..!
Polimer News