செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே சமூகநலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்குச் சொந்தமான கார் மோதி, ஸ்கூட்டரில் வந்த இறையன்பு என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அரசு வாகனத்தில் ஜெகதீஸ்வரி சென்ற நிலையில், அவருக்குப் பின்னால் பாதுகாப்பு வாகனமும் அதற்குப் பின்னால் அமைச்சரின் சொந்த காரான மாருதி எர்டிகாவும் சென்றுள்ளன. காட்டாங்குளத்தூர் சிக்னலில் இளைஞர் சாலையைக் கடக்கும்போது, எர்டிகா கார் அதிவேகமாக வந்து அவர் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. காரை பறிமுதல் செய்த போலீசார், அமைச்சரின் ஓட்டுநர் சின்ன அ