சென்னை புழல் அருகே பிரதான சாலையில் பூமிக்கு அடியில் செல்லும் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சுமார் 15 அடி அகலத்தில் 25 அடி ஆழ பள்ளம் ஏற்பட்ட நிலையில் வாகன ஓட்டிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இதனால்,செங்குன்றம் ,மாதவரம் பகுதியில்ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மேலும்,பள்ளத்தில் வாகனங்கள் சிக்காமல் இருக்க போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.