பாஜக தனக்கு எந்தத் தீங்கையும் இழைக்கவில்லை என்றும் எந்தத் துன்பத்தையும் தரவில்லை என்றும் கூறிய அண்ணாமலை, தனது பாதை வேறு, பயணம் வேறு என்று உணர்ந்ததால் விலகி வந்ததாகக் கூறியுள்ளார். லண்டனில் வி த லீடர்ஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது 80 விழுக்காடு அரசியல் நேரம் எதிர்க்கட்சிகளுடன் சண்டை போடுவதிலேயே இருந்தது என்றும் ஆனால் தாம் அதற்காக அரசியலுக்கு வரவில்லை என்றும் கூறினார். வெளிநாட்டுக்குச் செல்வோர் இந்தியன் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் நிலையை பிரதமர் மோடி கடந்த 12 ஆண்டுகளில் ஏற்படுத்தி இருக்கிறார் என்று கூறிய அண்ணாமலை, பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிக்கு முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மாபெரும் தலைவர் என்றார்.