பழனி முருகன் கோவில் மகாமண்டபத்தில் உள்ள சிவன் சன்னதியில் 89கிலோ அளவில் வெள்ளித்தகடு பதிக்கப்படும் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சட்டமன்றத்தில்அறிவித்தார். இதனையொட்டி,கரூரை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் சிவன் சன்னதிக்கு தேவையான89கிலோ வெள்ளிப்பொருட்களை நன்கொடையாக வழங்கிய நிலையில் சிறப்பு பூஜைக்குப் பின்னர் சன்னதியில் வெள்ளித்தகடு பொருத்தும் பணிகள் துவங்கியது.