தூத்துக்குடி முத்தையாபுரத்தில் மனைவியையும் குழந்தைகளையும் தன்னுடன் அனுப்பாத ஆத்திரத்தில் மாமனாரை அரிவாளால் வெட்டிக் கொன்ற மருமகனை போலீசார் தேடி வருகின்றனர். கொல்லப்பட்ட முனியசாமி என்பவரது மகளுக்கும் மதுரையைச் சேர்ந்த முருகனுக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மது போதையில் முருகன் அடித்துத் துன்புறுத்தியதால், முனியசாமியின் மகள் குழந்தைகளுடன் தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். ஒன்றரை மாதமாக அவரை முருகனுடன் அனுப்பி வைக்க முனியசாமி மறுத்து வந்ததால், நேற்று நள்ளிரவில் வீட்டின் வெளியே படுத்து உறங்கிக் கொண்டிருந்த அவரை வெட்டிக் கொன்றுவிட்டு முருகன் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
Back to Top News
Top
September 7, 2026 at 10:28 AM
நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகன்..
Polimer News