மதுரை மாவட்டம் ஆனையூர் அருகே காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த பள்ளி மாணவர் தமிழ்செல்வன் முட்புதரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 11ஆம் வகுப்பு படிக்கும் தமிழ்ச்செல்வன்,தனது வீட்டருகே உள்ள வேறோரு சமூகத்தைச் சேர்ந்த மாணவியுடன் நட்பாக பழகி வந்ததாகவும், அதனை மாணவியின் தந்தை கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவர் தமிழ்ச்செல்வன் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.