சென்னை நேரு ஸ்டேடியத்தில் 8 நாட்கள் நடைபெறும் தேசிய சீனியர் பேட்மிண்டன் போட்டியை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மற்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இணைந்து பேட்மிண்டன் விளையாடி தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு இதுவரை பார்த்த விளையாட்டுத்துறை அமைச்சர்களிலேயே ஆதவ் அர்ஜூனா தனித்துவம் வாய்ந்தவராக திகழ்வதாக அன்புமணி ராமதாஸ் கூறினார். இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அரசியலுக்கு அப்பாற்பட்டு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் Sports for Everyone என்ற பெயரில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
Back to Top News
Top
July 16, 2026 at 7:28 AM
சென்னையில் தேசிய சீனியர் பேட்மிண்டன் போட்டி தொடக்கம்..!
Polimer News