காசாவில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் மீண்டும் கால்பந்து விளையாட்டுக்குத் திரும்பியுள்ளனர். இஸ்ரேலுடனான போரில், 56 விளையாட்டு கிளப்புகள், 285 விளையாட்டு மைதானங்கள் குண்டுவீசித் தகர்க்கப்பட்டன. இதனால், காசாவில் விளையாட்டு சேர்ந்த எந்த நடவடிக்கைகளும் கடந்த மூன்று ஆண்டுகளாகப் மேற்கொள்ளப்படாமல் இருந்தன. இந்த நிலையில், காசா முழுவதும் மிகச்சிறிய அளவில் விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்பட்டு, 5 பேர் கொண்ட அணிகளுக்கு இடையிலான கால்பந்துப் போட்டிகளை பாலஸ்தீன கால்பந்து சங்கம் மீண்டும் நடத்தத் தொடங்கியுள்ளது. போரால் பல இழப்புகளைச் சந்தித்தாலும், விளையாட்டு என்பது தங்களது வாழ்க்கையின் ஓர் அங்கம் என்பதை காசா மக்கள் உலகுக்கு காட்டி வருகின்றனர்.