திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் கிராமத்தைச் சேர்ந்த சாந்தாமணி என்பவர் வீட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் போல் நுழைந்து, அவரை மிரட்டி 18 சவரன் தங்க நகைகள் மற்றும் 4 லட்ச ரூபாயை ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 9 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றவர்களுக்கு திருப்பூர் நீதிமன்றம் தலா ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.