சேலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் 200 பேரை போலீசார் வெளியேற்ற முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மின்வாரியமே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.