தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் 90 வருடங்களுக்கு மேலாக உப்பு உற்பத்தி செய்து வரும் தன்பாடு சிறு உப்பு உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசு உடனடியாக குத்தகை காலத்தை நீட்டித்து வழங்க கோரியும், அங்கு கப்பல் கட்டு தளம் அமைக்க கூடாது என வலியுறுத்தியும் உப்பு உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த திமுக ஆட்சியில் உப்பு உற்பத்தியாளர்கள் உப்பு விவசாயம் செய்து வந்த நிலம் மற்றும் அதன் அருகே உள்ள இடங்கள் என சுமார் 3000 ஏக்கரில் வெளிநாட்டைச் சேர்ந்த கார்ப்பரேட் கப்பல் நிறுவனங்களுக்கு கப்பல் கட்டும் தளத்திற்காக சிப்காட் மூலம் இடம் கையப் படுத்துவதாக அறிவித்தது. இதற்கு உப்பு உற்பத்தியாளர்கள் எதிர்ப்பின் காரணமாக அப்போது கப்பல் கட்டும் தளத்திற்கு இடம் கையகப்படுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டது
Back to Top News
Top
July 16, 2026 at 10:42 AM
கப்பல் கட்டும் தளம் அமைக்க உப்பு உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு..!
Polimer News