மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பாமக ஆதரவு அளிக்காது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என ஏற்கெனவே பாமக சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது எந்தக் கட்சிக்கும் ஆதரவளிப்பதில்லை என்று கட்சி முடிவு செய்துள்ளதாக அன்புமணி கூறியுள்ளார். நிர்வாகிகளுடன் ஆலோசனை பாமக நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதனிடையே, பாமக தங்களுக்கு ஆதரவளிக்கும் என அதிமுக தரப்பில் எதிர்பார்ப்பு நிலவி வந்ததாக கூறப்பட்ட நிலையில், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்ற பாமக அறிவித்துள்ளது.
Back to Top News
Top
September 19, 2026 at 1:57 AM
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. பாமக அதிரடி முடிவு!
Polimer News