சென்னை, திருச்சி உள்பட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு தொடர்புடைய 6 இடங்களில், மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனை. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில்,100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக எழுந்த புகாரில் நடவடிக்கை. சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை. ஆழ்வார்பேட்டையில் உள்ள அன்பில் மகேஷின் உறவினர் வீட்டிலும், தியாகராயர் நகரில் உள்ள அலுவலகத்திலும் ரெய்டு. சென்னை தியாகராய நகரில், அன்பில் மகேஷ் முன்பு குடியிருந்த வீட்டில் சோதனையிட போலீசார் காத்திருப்பு.வருவாய்த்துறையினர் வந்ததும் பூட்டை உடைத்து சோதனையிடத் திட்டம். திருச்சியில் போலீசார் சோதனை நடத்தி வரும் அன்பில் மகேஷ் வீட்டிற்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வருகை. போலீஸார் உள்ளே அனுமதிக்காததால் அன்பில் மகேஷிடம் செல்போனில் பேசிவிட்டு புறப்பட்டார். திமுக ஆட்சியில் தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் அங்கீகாரம், தரம் உயர்வு, DTCP அனுமதி பெற்றுத்தருவதாக கூறி ரூபாய் 100 கோடி வசூல் என புகார்... பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது மத்திய குற்றப்பிரிவு போலீஸ். குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக பிரமுகர் பிடி அரசகுமார் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் சிக்கிய ஏராளமான ஆதாரங்கள். முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது வழக்கு பதிவு செய்து ரெய்டு நடத்துவது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விளக்கம். தனியார் பள்ளி உரிமையாளர்களிடம் ரூபாய் 100 கோடி வசூலித்து மோசடி செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், அன்பில் மகேஷ்க்கு எதிராக வாக்குமூலம்.ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விளக்கம். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதை திசை திருப்பவே அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.
Back to Top News
Top
September 16, 2026 at 7:08 AM
சென்னை, திருச்சி உள்பட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு தொடர்புடைய 6 இடங்களில், மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனை..
Polimer News