திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குகளில் அபராதம் விதிக்கும் பணத்தை கையாடல் செய்ததாக கோர்ட் அலுவலக ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நடுவர் நீதிமன்றத்தில் அலுவலக கணக்கர்கள் ஆய்வு செய்த போது 75 ஆயிரம் ரூபாயை ஊழியர் அழகர் கையாடல் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து நடுவர் நீதிமன்ற தலைமை எழுத்தர் யோகலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் நிலக்கோட்டை போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.