சுதந்திர போராட்ட வீரரான தியாகி இமானுவேல் சேகரனாரின் 69ஆவது நினைவுநாளை முன்னிட்டு, பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் ((த.வெ.க. சார்பில்)) அமைச்சர்கள் அருண்ராஜ், சி.டி.ஆர்.நிர்மல்குமார், ராஜீவ், மதன் ராஜா, பிரபு ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அவரது மணிமண்டபத்தில் உள்ள உருவச் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.