போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்ட 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் காவல் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் நடந்த போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் விஜய், போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை முன்மொழிய மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களை அழிக்கும் நடவடிக்கையை காணொலி மூலம் பார்வையிட்ட முதலமைச்சர், போதைப் பொருள் எதிர்ப்பு மன்றத்தை சிறப்பாக செயல்படுத்திய பள்ளி, கல்லூரிகளுக்கும் விருதுகளை வழங்கினார். போதைப் பொருள் இல்லா பள்ளி, கல்லூரிகள் எனும் விழிப்புணர்வு வீடியோவையும் முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.