சென்னை - திருவனந்தபுரம் தொழில் வழித்தடத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டு மற்றும் அமலாக்க அறக்கட்டளையின் 3-வது உயர்மட்ட கண்காணிப்பு அதிகாரக் கூட்டத்தில் பங்கேற்ற கீர்த்தனா இந்த கோரிக்கையை முன்வைத்தார். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
Back to Top News
Top
August 18, 2026 at 5:11 AM
''சென்னை - திருவனந்தபுரம் தொழில் வழித்தடத் திட்டத்தை பரிசீலிக்க வேண்டும்'' - அமைச்சர் கீர்த்தனா
Polimer News