சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.- பா.ம.க.- பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைந்து தேர்தலை சந்தித்த நிலையில், அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் 5 பேர், பா.ம.க. தலைவர் அன்புமணியை சென்னை தி.நகரிலுள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அரூர் தொகுதி சம்பத்குமார், அணைக்கட்டு தொகுதி வேலழகன், பண்ருட்டி தொகுதி மோகன், திருக்கோவிலூர் தொகுதி பழனிசாமி, ஆற்காடு சுகுமார் ஆகியோர் தங்களது வெற்றிக்கு பா.ம.க.வின் பங்களிப்பிற்காக அன்புமணி ராமதாஸை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.