சீனாவின் சோங்கிங் நகரில் மலையின் ஒரு பகுதி நேற்று சரிந்து கட்டடங்கள் புதைந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 34 பேர் மாயமாகி உள்ளதால் மீட்புப் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. மலையைச் சுற்றியும் மலை மீதும் கட்டடங்களால் நிரம்பப் பெற்ற சோங்கிங் நகரில் நிலச்சரிவுக்கான அபாயம் நீங்காததால் அடிவாரப் பகுதிகளில் வசித்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நிலச்சரிவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த அதிபர் ஸீ ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.