தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலமைச்சர் விஜய் வரும் 10ஆம் தேதி,அரசு முறை பயணமாக, இங்கிலாந்து நாட்டிற்கு பயணமாவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய், தனது கடவுச்சீட்டுக்கான சரிபார்ப்பு பணிகளை மேற்கொண்டார். இதற்காக, பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வந்தபோதும், தன்னை காண வந்திருந்து காத்திருந்த, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளையும், இளையோரையும், பொதுமக்களையும், காரில் இருந்து இறங்கி நடந்து சென்று முதலமைச்சர் சந்தித்தார். பாஸ்போர்ட் அலுவலகத்தில் சரிபார்ப்பு பணிகளை முடித்துவிட்டு திரும்பிய முதலமைச்சரை பார்த்ததும் பெண்கள் உற்சாக மிகுதியில் கூச்சலிட்டனர்.