தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே முருக்கங்குடி - நெடார் இடையேயான 5 கிலோ மீட்டர் சாலையில் தெருவிளக்குகள் இல்லாததால் ஏற்படும் தொடர் விபத்துகளைக் கண்டித்து, கிராம மக்கள் மின்கம்பங்களில் தீப்பந்தங்களை ஏற்றி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறும் அப்பகுதி மக்கள், அசம்பாவிதங்கள் நடக்கும் முன் உடனடியாக மின்விளக்குகள் அமைத்துத் தரக்கோரி முழக்கமிட்டனர்.