விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சுள்ளங்குடி கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து, நீட் தேர்வில் 490 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவி சங்கீதாவிற்கு 7 புள்ளி 5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் பயில இடம் கிடைத்துள்ளது. தன்னைப் போல் ஏழ்மையான குடும்ப சூழ்நிலையில் உள்ள மாணவர்கள் மருத்துவம் பயில நீட் தேர்வு அவசியமானது, தேர்வு கடினமானது அல்ல எனவும் படித்தால் எளிதாக நீட் தேர்வை எதிர்கொள்ள முடியும் எனவும் மாணவி சங்கீதா தெரிவித்துள்ளார்.