சூர்யா நடிப்பில் வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்று வரும் நிலையில் அதற்கான நன்றி தெரிவிக்கும் விழா சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகை ராதிகா, சினிமாவில் போராடி வென்றவர் சூர்யா என்றும், மனப்போராட்டங்களில் இருந்து அவர் வென்று வந்ததை நேரடியாக பார்த்திருப்பதாகவும் கூறினார்.