தமிழகம் முழுவதும் தரமான, உறுதியான சாலையை அமைத்து தரவேண்டும் என்பதே தவேக அரசின் முக்கிய குறிக்கோள் என்று தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரையிலான சாலை பணிகள் 5 கட்டங்களாக நடைபெறுவதாகவும், முதற்கட்டமாக காட்டுப்பள்ளி முதல் தச்சூர் வரையிலான 25 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெறும் பணிகளை பார்வையிட வந்ததாக அவர் கூறினார். தமிழ்நாடு முழுவதும் இப்போதைக்கு 6 வழி, 8, வழிச்சாலைகள் இல்லை என்றும், இது குறித்து ஒன்றிய அரசிடம் தெரிவித்து இருப்பதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.