பட்டப்படிப்புக்குப் பிறகு அமெரிக்காவில் தங்கிப் பணிபுரிய விரும்பும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களிடம் ஒரு லட்சம் டாலர் வசூலிக்கும் திட்டத்தைக் கொண்டுவர டிரம்ப் அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அரசின் சமீபத்திய குடியேற்றக் கட்டுப்பாடுகளால் நெருக்கடியில் உள்ள மாணவர்களுக்கு இந்த நடவடிக்கை மேலும் சிக்கலை உண்டாக்கும் எனக் கூறப்படுகிறது. இத்திட்டத்தால், பல மாணவர்கள் தங்களது விசாவை நீட்டிக்க முடியாத நிலை ஏற்படும் என்றும், அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அமெரிக்க அரசு இந்தத் திட்டத்தைப் பரீசிலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Back to Top News
Top
July 31, 2026 at 6:08 AM
அமெரிக்காவில் படித்து அங்கேயே வேலை செய்ய ரூ.1 கோடி?
Polimer News