சென்னை தேனாம்பேட்டை தேசிய நல்வாழ்வு குழும அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.7.70 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 11 அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுக்கான படுக்கை வசதிகள் உள்ளிட்டவற்றை காணொலி வாயிலாக அமைச்சர் அருண் ராஜ் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். பின்னர் பேட்டியளித்த அவர், நாமக்கல் கிட்னி திருட்டு வழக்கில் அரசியல் தலையீடு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நீட் தேர்வு குறித்து விவாதிக்கப்படும் என்றார்.