நீட் தேர்வை ஒழிக்க கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும் என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி கல்வியை பட்டியலிட வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன் மூலம், மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும் என முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்றும் வாக்கு அரசியல் செய்வதற்காக பொய்யான வாக்குறுதிகளை த.வெ.க அரசு ஒருபோதும் அளிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.… July 22, 2026
நீட் தேர்வை ஒழிக்க கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும் என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி கல்வியை பட்டியலிட வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன் மூலம், மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும் என முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்றும் வாக்கு அரசியல் செய்வதற்காக பொய்யான வாக்குறுதிகளை த.வெ.க அரசு ஒருபோதும் அளிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.… — TVK Vijay (@TVKVijayHQ) July 22, 2026