சென்னை மற்றும் மதுரையில் உள்ள ஐஸ்வர்யா, ஏஆர்சி, பிரசாந்த் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட செயற்கை கருத்தரிப்பு மையங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு செயற்கை கருத்தரிப்பு செய்துள்ளனர்? அதற்காக பெறப்பட்ட கட்டணம் எவ்வளவு? முறையாக வரி செலுத்தியுள்ளார்களா என்ற கோணங்களில் சோதனை நடைபெற்று வருவதாக வருமானத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.