சென்னை பூங்கா, சின்ன சேலம் மற்றும் குன்னூர் உட்பட நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட 75 நவீன ரயில் நிலையங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பஞ்சாபின் ஜலந்தரில் நடைபெற்ற விழாவில் காணொலிக் காட்சி வாயிலாக ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதன்மூலம் 4 புள்ளி 5 மீட்டராக இருந்த நடைமேடை மேம்பாலங்கள் தற்போது 12 மீட்டர் வரை அகலப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் நலன் கருதி லிப்ஃட் மற்றும் எஸ்கலேட்டர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.