பிற கட்சிகள் மீது சீமான் வெறுப்பு அரசியல் செய்வதை ஏற்க முடியவில்லை எனக் கூறி திரைப்பட இயக்குனர் களஞ்சியம் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினார். தனிநபர்கள் மீதான தங்களின் விமர்சனங்களின் தரம் குறித்து தனக்கு மிகுந்த மனவருத்தம் உண்டு என சீமானுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் உறுப்பினர்களே சக கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் மீது வெறுப்பரசியலைக் கையாள்வதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் கருத்து வேறுபாடுகளுடன் நாதகவில் தொடர்ந்து பயணிப்பது ஆரோக்கியமானதாக இருக்காது என்பதால் விலகுவதாகவும் அவர் கூறியுள்ளார்.