ஆறு மாதங்களில் தவெக ஆட்சி கவிழும் என்ற முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் பேச்சுக்குப் பதிலளித்த அமைச்சர் மரிய வில்சன், அவர் அறியாமையில் பேசுவதாகக் கூறினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை கொடுப்பது போலத் தெரியவில்லை என்றும் அவரது தலைமைக்கும் அது தெரியவில்லை என்றும் கூறினார்.